ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் பணியிடமாறுதல் என்பது அவ்வப்போது நடைபெறும் ஒரு சாதாரண அலுவலக நடைமுறைதான் என்பது பொதுவாக அனைத்து அரசு ஊழியரும் அறிந்த ஒன்றுதான். இருப்பினும் பணியிடமாறுதலிலும் பல வலிகள் இருப்பதை அறியமுடிகிறது இல்லை இல்லை உணர முடிகிறது ஒருசில நேர்வுகளில். உண்மையில் பணியிடமாறுதலில் பல நெகிழ்ச்சியான, உணர்வு பூர்வமான நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இது பற்றிய ஒரு தகவல்தான் இந்த பதிவு.
ஒருவரை ஒருவர் ஒவ்வொரு சூழலிலும் பிரிந்த செல்கிறோம். பிரிவு என்பதே உறவுக்காகத்தான் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது. இங்கிருந்து பிரிந்தாலும் வேறு ஒரு புதிய உறவு செல்லும் இடத்தில் உருவாகும் அன்பை உள்ளத்தில் வைத்திருப்பவர்களுக்கு. நாம் என்ன சாதித்தோம் நாம் என்ன சம்பாதித்தோம் என்பதை பிரிவு ஏற்படும்போது கண்ணால் காணமுடிகிறது, மனதால் உணரமுடிகிறது. ஒருவரை ஒருவர் விட்டு பிரியும்போது ஒருதுளி கண்ணீர் வருகிறதே அங்கே தெரியும் உங்கள் அன்பு. ஆண் பிள்ளைகளை அழக்கூடாது என அடிக்கடி நாம் சொல்லி வளர்ப்பதால் அவர்களுக்கு கண்ணீர் வந்ததில்லை பொதுவாக பிரிவின்போது என்பதை உணரமுடிந்தது. ஆனால் பெண்களோ தங்களது பிரிவை கண்ணீரால் காண்பித்துவிடுகின்றனர். இவ்வாறான சூழ்நிலைகளை விவரிக்க முடியாது அவை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்.
தமிழரின் பண்பாடு விருந்தோம்பல். விருந்தோம்பலோடு நிறைவுபெறவேண்டும் எண்ணி அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது அன்பு கலந்து. அனைவரும் உண்டு மகிழ்ந்தோம், வயிறு நிறைந்தது மனம் தான் வெறுமையாக இருந்தது.
..
No comments:
Post a Comment