வனப்பாதுகாப்பு படை

 வனத்துறை என்பது வனம் மற்றும் அதனைசார்ந்த பகுதிகளை பாதுகாப்பது மற்றும் மேலாண்மை செய்ய உருவாக்கப்பட்ட ஒரு துறையாகும். பாதுகாப்பு மற்றும் மேலாண்மை செய்ய ஏதுவாக வனச்சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு இயற்றப்பட்டு, மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வனச்சட்டம் 1882 (5/1882) இல் முகப்புரையில் "தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள காடுகளை பாதுகாப்பதும் நிர்வகிப்பதும் அவசியமாக இருப்பதால் இச்சட்டம்  இயற்றப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

வனத்துறையில் நிர்வாக காரணங்களுக்காகவும், பாதுகாப்பு பணியை மேம்படுத்தவும் பல்வேறு பிரிவுகள் உள்ளன. பாதுகாப்பு பிரிவில் உள்ள ஒரு அங்கம் தான் வனப்பாதுகாப்பு படை என்பது.  வனப்பாதுகாப்பு படை என்ற பெயரிலேயே பாதுகாப்பு என்ற சொல் உள்ளது. எனவே இவர்கள் பணியும் வனத்தை பாதுகாப்பது என்பது தெரிகிறது. வனப்பாதுகாப்பு படையினர் தற்போதைய சூழலில் பொதுவாக எந்த மாதிரியான பணியினை செய்கிறார்கள் என்பது பற்றிய ஒரு சிறிய விளக்கம்.

வனப்பாதுகாப்பு படையினர் ஒரு சில இடங்களில் பாதுகாப்பு பணிக்கு உதவுவதும், குற்றங்களை கண்டுபிடிக்கவும் உதவுகின்றனர். ஆனால் அது மிகவும் சொற்பமானதாகவே உள்ளது பெரும்பாலான இடங்களில் வனப்பகுதியில் சென்று குற்றம் நடந்துள்ளது என உயர் அலுவலர்களுக்கு அறிக்கை செய்கிறார்கள். வனப்பகுதிக்கு செல்லும்போது சம்பந்தப்பட்ட பணியாளர்களை அழைத்துச் சென்றால் குற்றம் கண்டுபிடிப்பதிலும் குற்ற எதிரி யாராவது இருந்தால் அவர்களை அடையாளம் காணவும் உதவியாக இருக்கும். ஆனால் அவ்வாறு செய்யாமல் குற்றம் நடந்துள்ளது என்றும் எந்த இடம் என்பதை தோராயமாக கூறும் வனப் பாதுகாப்பு படையினர் குற்ற சம்பவம் நடந்த இடத்தை பல நேரங்களில் துல்லியமாக கூறுவதும் இல்லை. குற்ற எதிரி விபரமும் கூறுவதில்லை. அறிக்கை செய்வதில் கவனம் செலுத்தும் வனப்பாதுகாப்பு படையினர் குற்ற எதிரியை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துவது இல்லை. 

வனப்பாதுகாப்பு படையினர் ரகசியல் தகவல் அடிப்படையில் சென்று குற்ற சம்பவம் நடந்த இடத்தை கண்டுபிடித்ததாக அறிக்கை செய்கின்றனர். ரகசிய தகவல் அடிப்படையில் குற்றச்சம்பவம் நடந்த இடத்தை அறியும்போது குற்ற எதிரியின் விபரம் மட்டும் ரகசிய தகவலில் கிடைக்காமல் போவது எப்படி என்கிற இயல்பான சந்தேகம் எழுகிறது. அவர்களின் எந்தவொரு அறிக்கையிலும் குற்ற எதிரியின் விபரம் இருப்பதில்லை. ஒருசில இடங்களில் ரகசிய தகவலுக்கு அரசால் சன்மானமும் வழங்கப்படுகிறது. 

GPS (GPS Readings) அளவீடு கொண்டு இடம் கண்டறிதல்

 அனைவருக்கும் வணக்கம்

தற்போது வனத்துறையில் GPS Readings - இன் பயன்பாடு அதிகரித்துள்ளது. எந்தவொரு பணி செய்தாலும், ஏதாவது திட்டப்பணிகளை செய்தாலும் அந்த இடங்களின் GPS  அளவீடுகளை தெரிவிக்கவேண்டும்.  GPS அளவீடுகளை எடுக்கவும். GPS அளவீடுகளுடன் கூடிய Photo  எடுக்கவும் பல செயலிகளை (Applications  it means App)  நாம் நமது செல்போன் மூலம் பயன்படுத்துகிறோம். நம்மால் அளிக்கப்படும் GPS  அளவீடுகள் கொண்டு ஒரு இடத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதைப்பற்றி அறிய பல செயலிகள் (App) உள்ளது. அதில் ஒன்றைப்பற்றி தற்போது இங்கு காணலாம்.

தற்போது நாம் அனைவரும் Mobile Phone (Android) பயன்படுத்துகிறோம். Android Mobile Phone உதவி கொண்டு GPS அளவீடுகள் அடிப்படையில் ஒரு இடத்தை Internet and Signal கிடைக்காத இடத்திலும் எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை என்னால் முடிந்த அளவு விளக்கமாக அளிக்கிறேன்.

1. முதலில் தங்களது Mobile Phone இல் Play Store சென்று GPS Waypoint Finder என்னும் செயலியை (App) பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


2. பின்னர் அந்த செயலியை (App) Open செய்யவும்.


Mobile Phone - இல் Location  ஆன் செய்து கொள்ளவும். மேலே உள்ள படத்தில் உள்ளவாறு தோன்றும். அதில் இடது பக்கம் Settings உள்ளது. அதில் Sound, Units, Location, Coordinates ஆகியவை இருக்கும். அதில்  Coordinates தேர்வு செய்து தங்களிடம் உள்ள Readings க்கு தகுந்தவாறு Degrees, or Degrees Minutes or Deg Min Sec இதில் ஏதாவது ஒன்றை Select கொள்ளவும் . நமது துறையில் Degrees format இல் மட்டுமே பெரும்பாலான Readings  (Eg N.12.123456, E 78.123456) இருக்கும். உங்களுக்கு தக்கவாறு Select செய்து கொள்ளவும்.


வலது பக்கம் Edit Option உள்ளது. அதில் Edit way Point, New Way Point, Import, Export, Delete  ஆகியவை இருக்கும். இதில் இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று New Way Point என்பதை தேர்வு செய்து பதிவு செய்தால் கீழே படத்தில் உள்ளவாறு தோன்றும். 

அதில் Name என்ற இடத்தில் Touch செய்து உரிய பெயரை பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் Edit Latitude and Longitude என்ற இடத்தை Touch செய்து GPS  அளவீடுகளை பதிவு செய்யவேண்டும். பின்னர் Done என்பதை Touch செய்தால் நீங்கள் சென்றடையவேண்டிய இடம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்றும் எந்த பக்கம் செல்லவேண்டும் என்பதையும் (Arrow Mark and Distance ) காணலாம்.




இரண்டாவது Edit Way Point இல் சென்றால் ஏற்கனவே உள்ள Reading ஐ Edit செய்து கொள்ளலாம். 


இதில் குறைந்தது 500 வரை பதிவுசெய்து கொள்ளலாம். 


என்னால் முடிந்த அளவு விரிவாக எடுத்துரைத்துள்ளேன் என நம்புகிறேன். தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் தங்களுக்கு பயனுள்ளதாக இல்லைெயனில் பிறருக்கு பகிரவும்.


கடவூர் தேவாங்கு சரணாலயம்

தமிழகத்தில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அதற்கான தொடர்நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 12.10.2022 ஆம் தேதி அரசிதழில் (Gazette Notification) கடவூர் தேவாங்கு சரணாலயம் (Kadavur Slendor Loris Sanctuary) அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியை உள்ளடக்கிய இச்சரணாலயத்தின் பரப்பளவு 11806.56 எக்டர் ஆகும். 

 தேவாங்கு அரசால் பாதுகாக்கப்படும் வன உயிரினம் ஆகும். 1972 வன உயிரினப்பாதுகாப்பு சட்டம் அட்டவணை I , Part I Mammals Serial Number 20 (Loris - Loris tardigradus) இல் வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இதனை வேட்டையாடுவது, வேட்டையாட முயற்சிப்பது உள்ளிட்ட அனைத்தும் தண்டைக்குரிய குற்றமாகும்.

ராம்சர் அங்கீகாரம் (RAMSAR CONVENTION)

ராம்சார் பிரகடனம்

ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் 02.02.1971 அன்று புயல், வெள்ளப்பெருக்கு, சுனாமி உள்ளிட்ட இயற்கைப்பேரிடர்களிலிருந்து நிலப்பகுதியை காப்பதில் முக்கியப்பங்காற்றும் சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட ஈர நிலங்களின் அழிவைத்தடுப்பதற்காக முதல் சர்வதேச மாநாடு மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 1975 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இம்மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. 1982 இல் இந்தியா கையொப்பமிட்டது. இதுவரை 172 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் உள்ள சதுப்பு நிலங்களை (ஈரநிலங்கள் உள்ளிட்ட) பாதுகாக்க வேண்டும் எனவும், பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லவேண்டும் எனவும், உள்ளூர், மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் பிரகடனம் வெளியிடப்பட்டது. இதற்கு ராம்சார் பிரகடனம் என்று பெயர். இம்மாநாட்டில் ஈரநிலங்கள் பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அவை தீர்மானங்களாக இயற்றப்பட்டன. அவ்வாறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட பிப்ரவரி 2 ஆம் தேதி உலக ஈரநாள் என்று ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதன் முதலில் ராம்சார் நகரில் கூடியதால் இந்த அமைப்புக்கு ராம்சார் அமைப்பு என பெயரி்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஈரநிலங்களை ஆராய்ந்த இந்த அமைப்பு 2450 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்திய அளவில் 75 இடங்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் 14 இடங்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.