எழுதுவதன் நோக்கம் குறை கூறுவது அல்ல.
வலி போக்கப்படவேண்டும்.
வனம் காக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான்
வனத்துறையில் பல நிலையில் அலுவலர்கள் இருப்பினும் களப்பணியாளர்கள் அதாவது வனத்தை பாதுகாப்பதில் நேரடியாக பணிபுரிபவர்கள் யார் எனில் அதில் உள்ள வன சீருடைப்பணியாளர்கள் தான். இவர்கள் தான் பாதுகாப்பு பணி மேற்கொள்ளுதல். திட்டப்பணி மேற்கொள்ளுதல், மற்றும் அலுவலகப்பணி மேற்கொள்ளுதல் என அனைத்து பிரிவிலும் பணியாற்றுகின்றனர். வன சீருடைப்பணியாளர்களிடம் பேசும்போது அவர்களின் இன்னல்களை / இயலாமையை / ஆற்றாமையை / இடர்பாடுகளை அறியமுடிந்தது. அதில் முற்றிலும் உண்மையில்லை என்று சொல்வதற்கில்லை. சற்று மிகையாகவும் இருக்கலாம் மறுப்பதற்கில்லை.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்னும் குறளை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்னும் குறளை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.
வன சீருடைப்பணியாளர்களில் உள்ள பதவிகள்
மற்றும் அதற்கான கல்வித்தகுதி
1. வனக்காவலர் - பத்தாம் வகுப்பு
2. வனக்காப்பாளர் - பனிரெண்டாம் வகுப்பு (அறிவியல் பிரிவு)
3. வனவர் - பட்டப்படிப்பு
4. வனச்சரக அலுவலர் - பட்டப்படிப்பு வனவியல் மற்றும் பிற பட்டப்படிப்பு
இது தவிர பதவி உயர்வு மற்றும் அமைச்சுப்பணியில் இருந்தும் பணியமர்த்தப்படுகின்றனர்.
வனத்தை பாதுகாக்கும் பணியை மட்டுமே ஆரம்ப காலத்தில் செய்து வந்த சீருடைப்பணியாளர்கள் திட்டப்பணிகளையும் பாதுகாப்பு பணியோடு சேர்த்து பார்க்க ஆரம்பித்தனர். திட்டப்பணிகள் என்பது 1980 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது பின்னர் படிப்படியாக பல்வேறு பெயர்களில் (TAP, NAP, VFC, EDC, ETMC, TBGP, GTM, TNRSP, NHAI, NABARD, TBGPCCR, MGNREGS etc.,) இன்று திட்டப்பணிகள்தான் பிரதான பணியாக மாறிவிட்டது.
1882 ஆம் வருட தமிழ்நாடு வனச்சட்டத்தின் முகப்புரையில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள காடுகளை பாதுகாப்பதும் நிர்வகிப்பதும் அவசியமாக இருப்பதால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே வனத்துறையின் முதன்மையான பணி வனத்தை பாதுகாப்பது மற்றும் நிர்வகிப்பது என்பது இதன் மூலம் தெரிகிறது.
ஆரம்ப காலத்தில் வனத்திலும் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களிலும் செயல்படுத்தப்பட்ட திட்டப்பணிகள் தற்போது வனத்திற்கு அப்பால் பல கிலோ மீட்டர் தொலைவிலும் செயல்படுத்தப்படுகிறது. திட்டப்பணிகள் அவசியம் தேவை. அதனால் மக்களுக்கும் வனத்திற்கும் பயன் உள்ளது. திட்டப்பணிகளால் பாதுகாப்பு பணி பாதிக்கப்படுகிறதா?
தொடரும்
நன்று
ReplyDelete