Vellore Circle

பணிநிறைவு பாராட்டு விழா

திரு.K.K.சம்பத்
வனவர்
அமிர்தி வனச்சரகம்
வேலூர் வனக்கோட்டம்
நாள் 31.05.2023

இன்று 31.05.2023 வேலூர் வனக்கோட்டம், அமிர்தி வனச்சரகத்தில் பணிபுரிந்த திரு.K.K.சம்பத், வனவர் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெற்றார்.

வனக்காப்பாளர் திரு.S.ஸ்ரீவெங்கடேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். இவ்விழாவிற்கு தலைமையேற்று நடத்திய வனச்சரக அலுவலர் திரு,C,முருகன் அமிர்தி வனச்சரகம் அவர்கள் பணி ஓய்வு பெறுவதற்கான ஆணை வழங்கி சிறப்புரையாற்றினார். 


இவர் கடந்த 23 ஆண்டுகளாக வனத்துறையில் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். வனக்காப்பாளராக திருவண்ணாமலை வனக்கோட்டத்தில் பணியில் சேர்ந்து பணிபுரிந்து வந்த நிலையில் வனவராக பதவி உயர்வு பெற்று விழுப்புரம். திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய வனக்கோட்டங்களில் பணிபுரிந்து இன்று 31.05.2023 இல் பணி ஓய்வு பெற்றுள்ளார்.


வனத்துறையில் பணியில் சேர்வதற்கு முன்னர் இவர் 16 ஆண்டுகாலம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார்.

வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் அமிர்தி சிறு உயிரியல் பூங்கா ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

விழாவில் பேசிய அனைவரும் ஓய்வு பெறும் வனவர் திரு.K.K.சம்பத் அவர்கள் பழக மென்மையானவர் என்றும் அனைவரிடத்திலும் அன்பாக நடந்துகொள்பவர் என்றும் யாரையும் கடிந்து பேசாதவர் என்றும் கொடுக்கும் பணியினை சிறப்பாக செய்யக்கூடியவர் என்றும் எடுத்துக்கூறினர்.



இவ்விழாவினை திரு.R.ஆனந்தசெல்வகுமார் வனவர், தொங்குமலை பிரிவு அவர்கள் ஒருங்கிணைத்து வழங்கினார்.

 திரு.சபரிநாதன் வனக்காப்பாளர் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

விழா இனிதே நிறைவுபெற்றது.




No comments:

Post a Comment