ஒரு மரத்திற்கு 10 செடிகள்

 மரங்களின் முக்கியத்துவம் பற்றி தற்போது அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டு மரக்கன்றுகள் நடவு செய்தும், இருக்கும் மரங்களை பாதுகாத்தும் வருகின்றோம். இருப்பினும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயற்கையாக உள்ள மரங்கள் அவ்வப்போது வெட்டப்படுகின்றது. அதாவது சாலை அமைத்தல். இருப்புப்பாதை அமைத்தல், தொழிற்சாலைகள் அமைத்தல் என இதன் பட்டியல் நீளும். இவ்வாறு மரங்கள் வெட்டுவதை தடுக்கமுடியாது. ஆனால் அதற்கான நெறிமுறைகளை உருவாக்கமுடியும். 


இவ்வாறு அத்தியாவசிய தேவைகளுக்காக மரங்கள் வெட்டப்படவேண்டிய சூழலில் ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகள் நடவு செய்யப்படவேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை 

G.O M.S. No 704 (Public Miscellaneous Department) Date 03.10.2010 ஆகும்.



No comments:

Post a Comment