வனக்குற்ற முயற்சி - சிவகிரி வனச்சரகம்

சிவகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வன உயிரினங்களை வேட்டையாட முயற்சிப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் இருந்தபோது வேட்டையாட முயற்சி செய்த 8 நபர்களை பிடித்து தலா 25000 ரூபாய் என மொத்தம் ரூபாய் 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.


தற்சமயம் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலும் வனச்சீருடைப்பணியாளர்கள் தங்களுடைய பணியினை செவ்வனே செய்து வருவதையே இந்த நாளிதழ் செய்தி வெளிப்படுத்துகிறது.

இப்பணியி்ல் ஈடுபட்ட அனைத்து சீருடைப்பணியாளர்களையும் மனதார பாராட்டவேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பதில் என்றுமே வனச்சீருடைப்பணியாளர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதையே இந்நிகழ்வு எடுத்துரைக்கிறது.

No comments:

Post a Comment