வழக்கு பதிவு செய்தல் (காவல்துறை - வனத்துறை)

வழக்கு பதிவு செய்தல் (காவல்துறை - வனத்துறை)
 
சீருடைப்பணியாளர்களில் பொதுவாக வழக்கு பதிவு செய்வது அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பது போன்ற பணிகளை காவல்துறையினரைப்போன்றே வனத்துறையினரும் மேற்கொள்கின்றனர். ஆனால் மக்கள் மத்தியில் பெரும்பாலும் வனத்துறையினரின் இந்த நடவடிக்கை அதிகம் தெரிவதில்லை. ஏனெனில் வனத்துறையினருக்கு சட்டத்திற்கு உட்பட்டு இணக்கக்கட்டணம் விதித்து வழக்கை முடித்துக்கொள்வதற்கு வழிவகை உள்ளது. இதனால் பெரும்பாலான வழக்குகள் நீதிமன்றத்திற்கு செல்வதில்லை.
 

வனக்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படும்போது ஒரு சில நிகழ்வுகளில் அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் சூழல் உருவாகிறது. வனத்துறையினர் ஒரு சில நேரங்களில் காவல்துறையினர் மீதும், காவல்துறையினர் ஒரு சில நேரங்களில் வனத்துறையினர் மீதும் வழக்கு பதிவு செய்யும் சூழல் உருவாகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு வனத்துறை அலுவலர்களுக்கும், காவல்துறை அலுவலர்களுக்கும் சுமூக உறவு ஏற்படுத்துவதற்கு நிர்வாக ரீதியில் அறிவுரைகள் வழங்கியுள்ளது.

அதன் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு கடித எண் (நிலை) 4163 வனம் மற்றும் மீன்துறை நாள்: 05.10.1984
அரசின் உள்துறையின் ஒப்புதலோடு இக்கடிதம் வெளியிடப்படுகிறது.
எண்:  115384 காவல் 9/84 -1  நாள்: 22.09.1984

No comments:

Post a Comment