மான்கள் தொடர்பானவை

28.02.2018 ம் தேதி நாளிதழ்களில் வெளியான செய்தி

தினகரன், தினத்தந்தி, தினமணி மற்றும் தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் மானை வேட்டையாடி அதன் கறியை விற்க முயற்சித்தவரை அந்த கிராமத்திற்கு சென்று கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி, கத்தி மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

வனத்துறையினரின் இந்த செயலுக்கு நாம் பாராட்டு தெரிவித்துக்கொள்ளவேண்டும். ஏனெனி்ல் ஆயுதம் வைத்துக்கொண்டிருப்பவர்களை துணிச்சலாக எந்தவித ஆயுதமும் இல்லாமல் சென்று கைது செய்கின்றனர் என்றால் அவர்களை பாராட்டித்தான் ஆகவேண்டும். அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்.

இதுபோன்று நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளை அரசும் அதிகாரிகளும் செய்து தரமுன்வரவேண்டும். அவ்வாறு செய்துகொடுக்கும்பட்சத்தில் அவர்களுடை பணி மென்மேலும் சிறக்கும்.

No comments:

Post a Comment