துளசி (Ocimum tenuiflorum)

துளசி (Ocimum tenuiflorum) ஒரு மூலிகை செடியாகும். பொதுவாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாக வளர்க்கப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து வணங்கும் வழக்கமும் உண்டு.


வகைகள்
நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்), காட்டுத்துளசி

மூலிகைகளின் அரசி

துளசி இலை நல்லது. அதை சாப்பிட்டால் சளி பிடிக்காது என்று பெரியோர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் துளசி கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை பல. அதனால்தான் இதனை மூலிகைகளின் அரசி என்கிறார்கள். நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது இந்த துளசி.


மேலும் இது நாம் நினைப்பது போல் மூலிகை மட்டுமல்ல சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது. இந்த பணியை பெரும்பாலான தாவரங்கள் செய்தாலும், துளசிக்கும் மற்ற தாவரங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. துளசியிலுள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. அதனால் சுத்தமான காற்று கிடைக்கிறது. துளசி அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது. கொசுக்களால் வரும் பல நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

                                          பயன்படுத்தும் முறை

காய்ச்சல் (Fever)

நாம் தினமும் பலவகையான காய்ச்சல்களை கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். எந்த காய்ச்சலாக இருந்தாலும் துளசியினைக்கொண்டு குணப்படுத்தலாம். 10 துளசி இலையுடன் 5 மிளகை நசுக்கி அதனுடன் 2 டம்ளர்  தண்ணீர்விட்டு, அது அரை டம்ளர் சுண்டும்படி காய்ச்சி, குடித்து விட்டு, சிறிது எலுமிச்சை சாறை அருந்தி, கம்பளிக் கொண்டு உடம்பு முழுக்க மூடிக்கொண்டு படுத்தால் மலேரியா காய்ச்சல் உட்பட பல காய்ச்சலும் படிப்படியாக குறையும் என்கிறது சித்த மருத்துவம்.

இளைமையுடன் இருக்க
நாம் என்றும் இளமையுடன் திகழ துளசி நீர் உதவுகிறது. சுத்தமான செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது. அத்துடன் தோல்சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும்.

உடலுக்கான கிருமிநாசினி
துளசி ஒரு அற்புதமான, மனித உடலுக்கான கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. ஆனால், நாம் தான் அதனை முறையாக பயன்படுத்துவதில்லை. தினமும் சிறிது துளசி இலையை மென்று சாறை விழுங்கி வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பல பிரச்னைகள் தீரும். வாய் துர்நாற்றம் நீங்கும். ‘உடலில் வியர்வை வாடை போக குளிக்கும் நீரில் முதல் நாளே துளசி இலைகளை ஊறவைத்தால், வியர்வை துர்நாற்றம் போய் உடல் மணக்கும்.

பயன்கள்

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபக சக்தியின்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம்.


தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கின்றன.

துளசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் நாள்பட்ட சொறி, படை, சிரங்குகள் மறைந்துவிடும்.

துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.

வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவு வியாதி உடலை நெருங்காது.


                           Ocimum tenuiflorum

 Ocimum tenuiflorum (synonym Ocimum sanctum), commonly known as holy basil, tulasi (sometimes spelled thulasi) or tulsi, is an aromatic perennial plant in the family Lamiaceae. It is native to the Indian subcontinent and widespread as a cultivated plant throughout the Southeast Asian tropics.
Tulasi is cultivated for religious and traditional medicine purposes, and for its essential oil. It is widely used as a herbal tea, commonly used in Ayurveda, and has a place within the Vaishnava tradition of Hinduism, in which devotees perform worship involving holy basil plants or leaves.

No comments:

Post a Comment